“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge
கையில் தடிகளோடு நிற்கும் காவல்துறையினர், கேள்வியே கேட்காமல், கண்ணில் பட்டவர்களை அடிக்கிறார்கள் [ REF ]. இதை காணொளியாக எடுத்து சமூகவலைதளத்தில் பரப்புகிறார்கள் சிலர். அதைக் கண்டு ரசிக்கிறார்கள் பலர். அடிவாங்கியவர்களில் எத்தனை பேர் முக்கியமான விஷயத்திற்காக வெளியே வந்திருக்கக் கூடும்? தவறோ! சரியோ! ஒருவரின் துன்பத்தில் நாம் சிரிப்பது எந்த விதத்திலும் சரி ஆகாது. செய்தித்தாள்களில் அடிவாங்கியவர்களின் புகைப்படங்களை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. அவர்களின் முதுகில் சுவஸ்திக் முத்திரை போல், ரப்பர் ட்யூப்களால் அடிவாங்கிய தடங்கள், போலீஸ் செயலின் பரிதாபங்கள். அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் குறை கூறவில்லை. சாலை சிக்னலில் சில அதிகாரிகள் மக்களிடம் மன்றாடும் காணொளிகள் மனதை உருக்குபவை. மஹராஸ்டிராவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதில் உயிர்யிழந்துள்ளார் [ REF ]. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் மருத்துவர்களை தாக்கும் புகைப்படம், இந்தூரில் செய்தியாளர்களை தாக்கியதாக போலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் [ REF ] என்று பட்டியல் நீண்டுகொண்டுபோகிறது. புதுசா வைரஸ் வந்துட்டுனா நான் எதுக்கு...
Comments
Post a Comment